Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தோஹா வழியாக உகாண்டாவைச் சேர்ந்த இருவர் என்டேபெப்பில் இருந்து வந்தனர். அவர்கள் கொண்டு வந்த பேக்கில் சந்தேகம் படக்கூடிய அளவில் மர்ம பொருட்கள் இருந்தது.
அதை விமான சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பரிசோதனையில் அது ஹெராயின் எனத் தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். 51 பாக்கெட்டுகளை கொண்ட அவற்றின் எடை சுமார் 9.8 கிலோ இருந்தது. அவற்றின் மதிப்பு 68 கோடி ரூபாயாகும்.